அண்ணனின் அடுத்த மூவ் என்ன? அதிரடி தகவல்கள்!

Thursday, December 1, 2011 Posted byபொய்யன்பீஜே செங்கிஸ்கான்........
அண்ணனின் அடுத்த மூவ் என்ன? அதிரடி தகவல்கள்! 



குபராவின் கடிதங்கள் மற்றும் அண்ணனின் ஆபாசங்கள் அடுத்தடுத்து வெளிவரும் நிலையில் வரும் 11 .12 .11 பொதுக் குழுவில் என்ன செய்யப் போகிறார் என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி?  கண்ணீர் விட்டு  ராஜினாமா நாடகம் நடத்தி தப்பிப்பாரா? அல்லது உண்மையிலே வருந்துவாரா?

ஏன் எனில் வல்லம் மாநாட்டில் ஏற்பட்ட தவறுகளுக்காக மாநில நிர்வாகிகளை வறுத்தெடுக்க தயாராக வந்த பொதுக் குழு உறுப்பினர்களை, அப்படியே திசை திருப்ப அரசியல்வாதிகளின் தந்திரமான, 'ஒரு  விஷயத்தை மறைக்க அதை விட பெரிய விஷயத்தை பிரச்சனையாக்கும் இரு கோடுகள் தத்துவத்தின் படி, வல்லம் மாநாட்டின் நிர்வாக கோளாறை சுட்டிக் காட்டி மல்லுக் கட்ட தயாராக வந்த பொதுக் குழு உறுப்பினர்களை 'ஒட்டு மொத்தமாக விலகுகிறோம்.இப்போது புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கும்' என்று வல்லத்தை மறக்க வைத்த காமராஜர் அரங்கப் பொதுக் குழு போல்            
   இந்தப் பொதுக் குழுவிலும் நான் ராஜினாமா செய்கிறேன்.எனது பரிசுத்தத்தை நிருபித்து மீண்டும் பதவிக்கு வருவேன்' என அறிவித்து விட்டு 'என் மீது குற்றம் சுமத்துவோர் இத்தனாம் தேதி நான் சென்னை மன்னடி கிரீன் பேலஸ் ஹோட்டல் இல் காத்திருப்பேன் நேரில் வந்து குற்றத்தை நிரூபிக்க வேண்டும் '   என அறைகூவல் விட்டு அந்த நாளில் 'எல்லாரும் வந்தச்சா?   ஏற்றி வையுங்கள் மலையை தூக்குகிறேன்' எனும் செந்தில் காமெடி  போல் கிரீன் பேலஸ் ஹோட்டலுக்கு [அந்த ஹோட்டல் தான் அண்ணனுக்கு வசதி] வந்த நான் நிரபராதி வராதவர்கள் பொய்யர்கள் என்று வழக்கம் போல் நாடகம் நடத்த உள்ளதாகவும்,    அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன?   

என்ன நாடகம் நடத்தினாலும் அண்ணனால் பாதிக்கப் பட்ட சில மாநில நிர்வாகிகள் பொதுக் குழுவில் பிரச்சனையை பூதாகரமாக்கி மல்லுக் கட்ட தயாராகி களமிறங்கி விட்டதாக தெரிகிறது. அடுத்தடுத்து வரும் ஆதாரங்கள் அண்ணனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி அவரது பரிசுத்த முகமூடியை கிழித்து உண்மை முகத்தை ஊருக்கும் உலகிற்கும் எடுத்துக் காட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.- அபு  நபிலா     

0 Response to "அண்ணனின் அடுத்த மூவ் என்ன? அதிரடி தகவல்கள்!"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..

இதுவரை