பன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]

Sunday, November 27, 2011 Posted byபொய்யன்பீஜே poyyanpj
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

அண்ணனை அனுஅனுவாக பின்பற்றும் ஒரு தம்பி அண்ணனின் பன்றி விவகார பத்வாவால் ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.[கற்பனைதான்]



பன்றியின் இறைச்சி மட்டுமே ஹராம். அதன் ஏனைய பாகங்களை 'யூஸ்' பண்ணிக்கலாம் என அண்ணன் வழங்கிய மார்க்கத் தீர்ப்பையொட்டி இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டதுதான் நமது 'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம்.
இந்த நிறுவனம் வாயிலாக பன்றியின் இறைச்சி நீங்கலாக, பன்றிக்கால் சூப்-பன்றி லிவர் ஃப்ரை-பன்றி எழும்பு சூப்-பன்றி கொட்டை ஃப்ரை-பன்றிக்குடல் சுக்கா ஆகிய தரமான உணவுகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது.

நமது நிறுவனத்தின் விற்பனை எல்லையை விரிவு படுத்தி உலகம் முழுவதும் கிளைகள் தொடங்கிட நாம் என்னிய வேளையில், ஒரே ஒரு கையெழுத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிய ஜெயலலிதா பாணியில்,'பன்றியின் அனைத்து பாகங்களையும் பேணுதல் அடிப்படையில் தவிர்ந்து கொள்ளவேண்டும்' என அண்ணன் திடீரென்று மறு மார்க்கத்தீர்ப்பு வழங்கியதால் நமது நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. நமது நிறுவனத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டது.

இப்போது மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டு அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதைப் போன்று, அண்ணனும் கருணை மனதுடன் 'பதப்படுத்தப்பட்ட பன்றித் தோலை விற்பனை செய்யலாம்' என இப்போது மார்க்கத்தீர்ப்பு வழங்கி எங்கள் நிறுவன ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். எனவே எமது 'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் முன்பு போல் பன்றியின் பலவகை பதார்த்தங்கள் இல்லாமல், அண்ணனின் மார்க்கத் தீர்ப்பின் அடிப்படையில் வெறும் பதப்படுத்த பன்றித்தோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், எமது நீண்டநாள் கனவான எமது நிறுவனத்தை உலகளாவிய அளவில் விரிவுபடுத்திட நாடியுள்ளோம். எனவே தமிழகம் தொடங்கி
உலகம் முழுவதும் பகுதி வாரியாக பன்றித்தோல் விற்பதற்கு முகவர்கள் தேவை. முகவர்களிடம் இருந்து எமது நிறுவனம் வைப்புத்தொகை எதையும் எதிர்பார்க்காது. அதே நேரத்தில் முகவர்கள் மாதம் குறைந்தது 500பன்றிகள் எமது நிறுவனத்திற்கு விலைக்கு கிடைத்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள;
'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம்.
அரண்மனைக்காரன் தெரு மண்ணடி சென்னை.
எமது நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேண்டுகோள்கள்;

உலக அளவில் பன்றித்தோல் பதப்படுத்தும் உரிமையும், விற்கும் உரிமையும் எமது நிறுவனத்திற்கே சொந்தமானது. மீறுபவர்கள் மீது 111கிரைமில் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, உலகிலேயே பன்றித்தோல் பதப்படுத்தும் ஒரே முஸ்லிம் நிறுவனம் எங்களுடையதுதான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம்.

ராமராஜனுக்கு 'பசுநேசன்' என்ற பட்டப்பெயர் உள்ளதுபோல், அண்ணனுக்கு 'பன்றிநேசன்' என்ற பட்டம் வழங்கி, பன்றித்தோல் போர்த்தி கவுரவிக்கும் விழா எமது நிறுவனம் சார்பாக விரைவில் நடைபெறும்.

ஆடு, மாடுகளை மதிக்கும் மக்கள் பன்றியை அந்த அளவுக்கு மதிப்பதில்லை. குறிப்பாக முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக் கூட கூறாமல் அவமதிக்கிறார்கள். இந்நிலையை மாற்றி பன்றிகளுக்கு உரிய கவுரவம் கிடைத்திட, தமிழக அரசு உடனடியாக பன்றிகள் நலவாரியம் அமைத்து, அதற்கு தலைவராக அண்ணனை நியமிக்கவேண்டும் என எமது நிறுவனம் அரசை வேண்டுகிறது.

ஆடு,மாடுகளை இலவசமாக வழங்கும் தமிழக அரசு, பன்றிகளையும் இலவசமாக வழங்க வேண்டும். தவறினால் பதினைந்து லட்சம் பன்றிகளை திரட்டி சென்னை குலுங்கும் அளவுக்கு மாநாடு ஒன்றை எமது நிறுவனம் நடத்தும்.

நலிந்துவரும் பன்றித் தொழிலை மேம்படுத்த, இனி பொண்ணாடைக்கு பதிலாக பன்றித்தோல் போர்த்த முன்வரும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு எத்தனை பன்றித்தோல் வேண்டுமானாலும் எமது நிறுவனம் இலவசமாக வழங்கும்.

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதைப்போல் வீட்டிற்கு ஒரு பன்றி வளர்ப்போம் என்று யாரேனும் முடிவு செய்தால் அவர்களுக்கு இலவசமாக எமது நிறுவனம் ஒரு பன்றி வழங்கும். மேலும் அவரை பதப்படுத்தப்பட்ட பன்றித்தோல் போர்த்தி கவுரவிக்கும்.

இன்னும் இது போன்ற ஏராளனமான திட்டங்கள் எமது நிறுவனத்தின் முன்னால் அணிவகுத்து நிற்கின்றன. வாருங்கள் பதப்படுத்தப்பட்ட பன்றித் தோலால் உலகை மூடுவோம். சாரி! வெல்லுவோம்.

இவன்;
'பித்னா போர்க்PORK இண்டர்நேஷனல்' நிறுவனம்.


-அப்துல் முஹைமின்.


0 Response to "பன்றித்தோல் விற்பனை முகவர்கள் தேவை.[ரீல்மா...ரீலு..ரீலு]"

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அதிகம் பார்த்தது..